Tuesday 27 November 2012

இனியவை நாற்பது..


"இனியவை செய்தல் முன் இனிதே
இனியவை கூறல் அதனினும் இனிதே
இனியவை நினைத்தல் அனைத்தினும் இனிதே
இனியவை நாற்பது  நூல்களில் இனிதே."

என்ன இது இத்தனை இனியவை என்று நினைக்கிறீர்களா??? வேரொன்றும் இல்லை. இனி இனியவை நாற்பது நூலின் எளிய விளக்கம் நம் தளத்தில். திரு. வா. மகாதேவ முதலியாரவர்கள் உரையைத் ஒட்டு எங்கள் பள்ளி ஆசிரியரும் சகோதரருமான திரு பிரசன்னா பிரபாகரன் எழுதும் எளிய உரைய நாம் படிக்கலாம். இந்த முயற்சியின் நோக்கம் நூலின் கருத்தை எடுத்து சொல்வது மட்டும் அல்ல. பல புதிய அரிய தமிழ் பதங்களை அறிவதும், ஒரு செய்யுளை எளிய முறையில் படித்து பொருள் கொள்ளும் பயிற்சியை எடுத்தலுமே. எங்களின் இந்த முயற்சிக்கு உதவி புரியும் பிரசன்னா ஐயாவிற்கு நன்றிகள். இதை தீபத்திருநாளில் தொடங்குவதில் பேருவகை கொள்கிறோம். தொடர்ந்து படியுங்கள், நண்பர்களோடு பகிருங்கள், கருத்துகளை பதியுங்கள். நன்றி.
இவண்,
கோகுல்,
சுபாசினி,
சந்தியா.

No comments:

Post a Comment