Thursday 22 October 2015

சிலப்பதிகாரமும் கண்ணனும்

கண்ணனை புகழ்ந்து மகிழ்ந்து போற்றி பல பாடல்களைக் கேட்டிருக்கிறோம். அதில்  ஓர் பா என்  மனதில்  நீங்காமல் நிற்கின்றது.

கண்ணனைக்  காணத கண்ணெல்லாம்  கண்ணென்றாகுமா? அது இருந்து பிறவற்றை கண்டுதான் என்ன பயன்? கண்ணனைக் கண்டால் மட்டும்  அவ்விரண்டும் கண்ணென்றாகிவிடுமா? கண்ணிமைத்துக்  கண்ணனை காணும்  கண்ணெல்லாம் கண்ணாகா.. இமைக்காமல்  கரியவனை கண்டு களிக்கும் கண்களே கண்கள், மற்றெல்லாம் இருபுண்கள். (உன்னைக்  காணாத கண்ணும் கண்ணல்ல என்ற பாடல்  நினைவிற்கு வருகிறதா.? )

இப்படி நான் இரண்டு வரிசேர்த்து எழுதிய பா இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம் .
ஆய்ச்சியர் குரவையில் வரும்  அச்செய்யுள் இதோ.

"கரியவனை காணாத கண் என்ன கண்ணே?
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே? "

அடடா! கவிதை! கவிதை!

Monday 19 October 2015

சிலப்பதிகாரமும் குழந்தைகள் பெயர்களும்

சிலப்பதிகார நூலில் வரும் சொற்களையும் சொற்றொடர்களையும் வைத்து அமைக்கக்கூடிய பெயர்களை இங்கு தொகுத்துள்ளேன். விரும்பினால் தங்கள் குழந்தைக்கு இதில் ஏதேனுமொன்றை பெயராக சூட்டலாம். 

கண்ணகி
மாதவி
கோவலன்
திங்கள் செங்கதிர் திகழொளி பொழில் நன்மொழி வடிவேல் பஃறுளி தென்னவன் முதல்வன் பெருவளன் தென்னன் மாமறை காவிரி கண்மணி கொற்றவன் வெங்கதிர் வேந்தன் முல்லை குறிஞ்சி கோமான் பூங்கொடி அண்ணல் பொய்கை வெண்ணிலா பணிமொழி பாவை வேங்கை பூம்பொழில் மேரு இமயம் புகழுடை வடிவு மதி செவ்வேள் நித்திலம் கோதை அருந்ததி செம்பியன் கயமலர் மயன் ஆம்பல் தாமரை தாழை சண்பகம் தென்றல் வேனில் கதிர் மல்லிகை கோமான் சுடர் மஞ்ஞை அன்னம் பசுங்கிளி யாழ் குழல் அமிழ்து அகில் முத்து மணி அருள் கவி சித்திரன் எழினி பூங்கோதை பசும்பொன் விரிகதிர் அணிநிலா வெண்பிறை மேகலை சந்தனம் செழுமலர் பைந்தளிர் சந்தரம் திலகம் பால்நிழல் பூவிலை வெந்திறல் வெற்றி வெற்றிவேந்தன் திருமாவளவன் அவந்தி மரகதம் அரசு பண்யாழ் நன்மொழி திருமகள் செழும்பதி செழும்பரிதி பாரதி உமை இமயவன் செம்பொன் காந்தள் கரிகால்வளவன் மரகதமணி மணிக்காந்தள் வளன் வெண்மதி நிறைமதி நறுமலர் திருமொழி முழுமதி சோலைமயில் இளநகை வெய்யோன் பூங்கானல் நித்திலம் கதிரவன் புதுமதி நிறைநிலா செவ்வழி விளரி யாழ் யாழிசை வஞ்சி இளவேனில் மாரன் குயிலோன் மதுரம் கீதம் செங்கோல் வசந்தம் ஆயிழை செந்தாமரை வளவேல் மென்பூ மாலதி இளங்கொடி தேவந்தி மணிவண்ணன் பன்மலர் இலவந்திகை எயில் செம்மல் பொய்கை கடல்வளன் செங்கயல் ஒளியோன் இசைமொழி மேகலை நீலி வேங்கை அகமலர் பகலொளி பாற்கதிர் பைந்தளிர் பானிலா பார்மகள் கௌசிகன் தீதிலன் செழியன் பொற்கொடி மேலினி வெண்மழை செம்பொன் தகைமலர் நகுல் மாதரி செங்கயல் மெய்மொழி குழலி ஞாயில் கவின் அசோதை நம்பி கருண்மொழி பூங்கோதை வேம்பன் இந்திரன் இளங்கோ நாவலன் பாரரசு மாயவன் ஆயவன் வாழ்வேந்தன் பொன்னன் கோச்சேரன் வளவஞ்சி வாசுகி வானவன் பொழிகதிர் மறவேல் செம்பொற்கொடி கோப்பெருந்தேவி பொன்னி செழியன் கோமகள் மாமகள் நாமகள் வார்த்திகன் கார்த்திகை சங்கமன் பரதன் நெடுஞ்செழியன் எழில் சரவணம் வேலன் வெற்பன் மலைமகள் இமயவரம்பன் வினைஞர் சஞ்சயன் பாலகுமரன் கனகன் விசயன் உத்தரன் செங்குட்டுவன் சீவகர் இளவரசு நெடுமதி மீமிசை தண்மதி மகரக்கொடி உமையவள் உமையொருபாகன் அகப்பா பேரிசை ஆயிழை மேலும் தமிழ்ப்படுத்தப்பட்ட பெயர்களை பின்வரும் செய்யுள் வரிகளில் காணலாம். விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் றுனுத்தரன் சிவேதன் அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன் செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன் பொருளன் புனிதன் புராணன் புலவன் சினவரன் தேவன் சிவகதி நாயகன் பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன் தத்துவன் சாதுவன் சாரணன் காரணன் சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளி இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன் குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான் சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன் அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள் விண்ணவன் வேத முதல்வன்....