Sunday 11 November 2012

இட்டேரி...

இரண்டு முள் வேலிகள் நடுவே செல்லும் வழியினை இட்டேரி என்பர். அதவாது இரண்டு பக்கமும் முள் வேலியும் கற்றாழையுமாக படை சூழ நடுவே போகும் மண்பாதை தான் இட்டேரி. வண்டிகள் செல்லும் வகையாக இது இருக்கும். கொங்கு மண்டல சிற்றூர்களில் வழக்கில் இருக்கும்(இருந்த) ஒரு வார்த்தை இது. இட்டாரி என்றும் சொல்வர். இட்டேரிகளே அழியும் நிலையில் இந்த சொல்லும் அழிந்து போகும். 

No comments:

Post a Comment