Monday 25 February 2013

Sunday 24 February 2013

மாடக்குழி

நாட்டார் வழக்கில் இருந்து இதோ ஒரு அழகிய தமிழ் சொல்.. "மாடக்குழி". shelf என்னும் ஆங்கில சொல்லுக்கு பல மொழியாக்கங்கள் இருக்கின்றன. அலமாரி என்று அகராதிகள் சொல்லும் போதும், அலமாரி தமிழ் சொல் இல்லை, கிழக்கிந்திய நிறுவனங்கள் நம் நாட்டுக்கு வந்த பிறகு அவர்களோடு வந்த சொல். 'அடுக்கு' என்றும் சொல்லலாம். இது கூட ஆங்கில மொழிபெயர்ப்பே அன்றி, இணையான தமிழ் சொல் என்று கொள்ள முடியாது. எனவே யூரோப்பிய மொழிகளின் வருகைக்கு முன் தமிழர்கள் அதை எப்படித் தான் வழங்கியிருப்பர்?? இதோ இப்படியும் வழங்கியிருக்கின்றனர். "மாடக்குழி".. விளக்கு மாடம், திண்ணை மாடம் என்னும் வரிசையில் இதுவும் இருந்திருக்கின்றது

Thursday 21 February 2013

இணையமும் படாத பாடுபடும் தமிழ் மொழியும்

தமிழ் ஆர்வளர்கள் இடையே புலக்கத்தில் இருக்கும் மற்றொரு பிற மொழிச்சொல் "நாவல்". நாவல் பழம், மரம் எல்லாம் தமிழ் தான், ஆனால் குறுங்காவியத்திற்கு "புதினம்" என்பதே தமிழ்ச் சொல். ஆங்கிலம் நங்கு தெரிந்தவர்கள் அதனை ஆங்கிலச் சொல் என்று தெரிந்தும் அதற்கு இணையான தமிழ்சொல் தெரியாத காரண்த்தினாலோ என்னவோ அதனைப் பயன்படுத்துகின்றனர். இதைக்கூட ஒருவாறு ஏற்றுக்கொள்ளலாம். ஆனல் தமிழ் புதினங்களைப் பற்றி தூய தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிய பலரும் "நாவலை" ஏதோ தூய தமிழ்ச்சொல் போன்று பயன்படுத்தியது தான் எரிச்சல் ஊட்டுகிறது. குறைந்தபட்சம் தூய தமிழ்க் கட்டுரைகளிலாவது அந்த சொல்லைப் பயன்படுத்தாதீர்கள். 

இணையத்தில் தமிழைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்ளலாமோ அதைவிட அதிகமாக தமிழ் மொழி சார்ந்த தவறான தகவல்களையும் பரப்பலாம். அப்படி இன்று நான் கடந்து வந்த ஒரு தகவல் தமிழின் வரலாற்றுப் புதினங்கள் பற்றியது. வர்ணனைக்காக அப்பட்டமாக தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் 'பொன்னியின் செல்வன்' என்று சோடித்திருந்தனர். பெரும்பாலனோர் படித்த ஒரே வரலாற்றுப் புதினம் அது மட்டும் தான். அதற்காக அதற்கு முன் வரலாற்றுப் புதினங்கள்இயற்றப்படவேயில்லை என்று கூறக் கூடாது. கல்கியின் முதல் வரலாற்றுப் புதினம் "பார்த்திபன் கனவு". தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் 1895 ஆம் ஆண்டில் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை என்பவரால் எழுத்தப்பட்ட "மோகனாங்கி" என்னும் நூலே ஆகும். இணையத்தில் தமிழை வளர்க்கும் நண்பர்களே, குறைந்தபட்சம் விக்கிப்பீடியாவிலாவது தேடுங்கள்....

Wednesday 20 February 2013

திருக்குறளும் அரும்பதங்களும்-1 (எழிலி)


 திருக்குறள் நூலை புரட்டும் போது நமக்கு நன்கு தெரிந்த குறள்களில் கூட நமக்கு தெரியாத ஒரு சொல் ஒழிந்திருக்கும்.

      அப்படி ஒரு சொல் "எழிலி". மங்குல் போல் இதற்கும் மேகம் என்று பொருள். இந்த சொல்லை வான் சிறப்பு அதிகாரத்தில் காணலாம்.

குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

பொருள்: பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.

எழிலி-மேகம்.

Thursday 14 February 2013

கலாச்சாரம் தமிழ்ச்சொல்லா???


கலாச்சாரம் தமிழ்ச்சொல்லா??? தமிழ் அகராதிகளைப் புரட்டியவரை அதற்கு இணையான தமிழ்ச்சொல் பண்பாடு எனக் காண்கிறோம். இருப்பினும் எல்லா தமிழ்ப் பக்கங்களும் தமிழ் "கலாச்சாரத்தயே" பேசுகின்றனர். பள்ளி கல்லூரிகளும் தமிழ்க் "கலாச்சாரப்" போட்டிகளைத்தான் நடத்துகின்றனர். அவர்களிடமும் இதே கேள்வியைக் கேட்டபோது, "ஏன், கலாச்சாரம் தமிழ்ச்சொல் தானே.. அப்ப அது தமிழ் இல்லையா???" என்று என்னை திரும்ப கேட்கின்றனர். நான் அறிந்த வரை கலை+ஆச்சாரம்=கலாச்சாரம். ஆச்சாரம் எப்படி தமிழ் ஆகும்? நாகரிகம் பண்பாடு என்ற சொற்கள் இருக்கின்றனவே.. ஒரு பிரபல கல்லூரி நடத்திய 'அழகிய தமிழ் மகன்' என்ற போட்டியில் "நாகரீகம்" என்று எழுதியிருந்தனர். இது வேறு புது சொல்லா?? தமிழர் பண்பாட்டில் இவ்வளவு குழப்பங்களா??? குறைந்தபட்சம் இந்த ஒரு வேற்று மொழிச்சொல்லயாவது விட்டொழிக்கலாமா? பெரும்பாலும் தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தாம் இந்த "கலாச்சாரத்தை" பயன்படுத்துகின்றனர். அது தமிழ்ச்சொல் தான் என்பதற்கு விளக்கம் இருந்தால் அதனை கேட்க செவிமடுக்கிறேன். இல்லையேல் இந்த சொல்லை விட்டொழிக்கலாம்.
 நன்றி.
 இவண்,
சுபாசினி.

Tuesday 12 February 2013

சகோதரி வினோதினிக்காக


தில்லியில் பிறந்ததிருந்தால் உனக்கு
கண்ணீர் அஞ்சலியும், தலைவர்கள்
இரங்கல் அறிக்கையுமாவது கிடைத்திருக்கும்
மாதாவம் செய்த தமிழ்மங்கயே!
அமிலம் வீசியவன் பிழைத்திருக்க
அழகு தமிழச்சி நீ மறைந்தாயே..
பெண்ணுரிமை பேசிய என் மக்களுக்கு
உன்னைப் பிழைக்க வைக்க வழியில்லை..
எங்கோ நடந்திருந்தால் கொடி பிடித்திருப்போம்..
கண்முன் நடந்ததனால் உன்னைக்
கண்டு கொள்ள மறந்துவிட்டோம்...
காலன் வந்து கொண்டுவிட்டான்
கண்ணிரண்டும் கலங்குதம்மா...
கண்ணே உன்னை நினைக்கயிலே...
மௌனம் சாதித்திருப்போம், உன் வரிசையில்
நாங்களும் நாளை நிற்கும்வரை...
மீளாது அங்கு நீ தூங்க
ஒரு தங்கை இங்கு எழுதுகின்றேன்...













(இயலாமையில் இதை மட்டும் தான் செய்ய முடிந்தது
:( சகோதரி வினோதினிக்காக சுபாசினியின் அஞ்சலி)

Tuesday 5 February 2013

வகுப்பறையில் நான்.

ஒரு கண் நெகிழ
ஒரு கண் நீர்க்க
நான்கு ஆண்டு தனிமை,
முடியப் போகும் நேரம்..
நான்கு ஆண்டை தனிமையில்
முடித்து விட்ட சோகம்...
என்னிரு விழிக்கும் போராட்டம்..
மூளைக்கு எட்டாத வாஸ்து
மூலையில், வகுப்பறையில் நான்.
எழுத வைத்த நாட்கள்
எழுதித் தீர்த்த தூவல்..
எல்லாம் கானல் நீராய்
எந்திர உலகத்தின் எச்சமாக
என் கிறுக்கல்கள் மட்டும்
எஞ்சி நிற்க... எழுதுகிறேன்.
...
சுபாசினி.

மழை


மழை

















என்னே இந்த மழையின் அருமை..
வெளுக்க வைத்தது,
வெளியுலகின் சாயங்களை அல்ல
என்னுடன் பழகியவர்கள்
உளமதன் சாயங்களை... ஏனோ
அழுது அழுது தீர்ந்தபின்னும்
இந்த குளிர்கால இரவுகள் எல்லாம்
கண்ணீரின் கதகதப்பிலேயே விடிகின்றன...

-சுபாசினி.

ஆட்டுக்கல்

குடிமிப்பிடி சண்டை
குழாய் அடியில் இல்லை
ஆட்டுக்கல்லோடு... மின்வெட்டு

காற்றாலை