Tuesday 29 November 2022

தேட்டம்

 தேட்டம் 


ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் என் சித்தி சொல்லி எனக்கு அறியக் கிடைத்த சொல் இந்தத் தேட்டம். எத்தனை நாட்களாகத் தமிழில் இப்படியொரு சொல்லுக்குத் தான் ஏங்கியிருந்தேன். 


Craving என்ற ஆங்கிலச்சொல்லிற்கு இணையான சொல் தான் இந்தத் தேட்டம்.. 


‘டீயிக்குத் தேட்டமா இருக்கு..’ 


சொல்லும் போதே அந்தத் தேட்டம் வெளிப்படுகிறது அல்லவா!

Friday 17 April 2020

'Bella Ciao' - தமிழில்

'Money Heist' என்ற பிரபல தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமான ஒரு பாடல் 'Bella Ciao'.
இப்பாடல் நாஜி ஜெர்மனியை எதிர்த்த இத்தாலிய போராட்டக்காரர்கள் பாடியது. வல்லாதிக்கத்தை எதிர்த்து ஒலிக்கப்பட்ட எதிர்ப்பின் குரல். மரணத்தை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாய் ஆதிக்கத்தை எதிர்க்கும் புரட்சியாளனின் குரலாய் இப்பாடல் ஒலிக்கும்.

பலமுறை கேட்டுவிட்டேன். கேட்டுவிட்டு சும்மா போக என்னால் தான் முடியாது. இதோ, என்னுடைய கரடுமுடான மொழிபெயர்ப்பு. வரிக்கு வரி எல்லாம் மொழிபெயர்க்கவில்லை. இசைக்கும் கூட மொழிபெயர்க்கவில்லை. ஆனால் ஒரு மொழிபெயர்ப்பு.

ஓ தோழா! ஓ தோழா! நான் போறேன், போய் வாறேன்!
மக்கள் உரிமையைப் பறித்தானே!
ஓ தோழா! நான் போறேன், போய் வாறேன்!
போராட..... நானும் போறேன்...
மரணம் ஏற்றே நானும் போறேன்...

ஓ தோழா! ஓ தோழா! நான் போறேன், போய் வாறேன்!
நானும் வீழ்ந்தால், மண்ணில் புதைப்பாயே..
தோழா! நான் போறேன், போய் வாறேன்!

அங்கே ஓர் நாள், பூவும் பூக்கும்...
வழிப்போவர் மீது வாசம் வீசும்...
ஓ தோழா! நான் போறேன், போய் வாறேன்!

நான் போறேன், போய் வாறேன்
'உரிமை வேண்டி விதைக்கப்பட்டான்' என்று..
அந்தப் பூவும் பாடும்...
ஓ தோழா! நான் போறேன்! நான் போறேன்... போறேன் நான்.... போறேன்!

இந்தப் பாட்டுக்கு சற்றும் குறையாத உணர்வோடு மரணத்திற்கு முத்தமிடும் வரிகள் வேண்டுமென்றால், பகத் சிங்கின் 'நான் ஏன் நாத்திகன்' நூலையும், அண்ணாவின் 'மரண சாசனம்' நூலையும் படிக்க வேண்டும்.

Wednesday 25 December 2019

இங்கு திரையிசைப் பாடல்கள் கிழித்துத் தொங்க விடப்படும் 😑😑

மு.கு. : தல .ஆர்.ரகுமான்என்ன மன்னிச்சிடுங்கநல்ல இசை மெட்டுல அமஞ்ச பாடல் தான்ஆனா வரிகள்நல்லா இல்லையேநான் என்ன செய்ய!!

சிறு வயதில் ஆகா ஓகோ என்று கேட்ட பாடல்கள் சிலவற்றை இப்போது கேட்டால் ‘இதத்தான் அப்படிஇரசிச்சோமா... ச்சை’ அப்படி இருக்கும் அல்லவாஇது அதைவிட மோசம்

சில பாட்டைக் கேட்கும் போதே இது இந்த வகை தான் என்றிருக்கும்அவை மோசமாயிருந்தாலும் எனக்கு ஒருகவலையும் இல்லைஆனால் சில பாடல்களில் தான் நாசூக்காக உள்குத்து வைப்பார்கள்தில்லானாதில்லானா பாட்டில் ‘கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு’ என்று அரசியல் வைத்தது போல.

நான் பேசப்போகும் அந்தப் பாடலின் முடிவில், ‘அன்பான சர்வாதிகாரம்’ என்று நம் அண்ணன் சொன்னது போல, ‘இப்படிக்கு அன்புள்ள ஆணாதிக்கம்’ என்று எழுதிக்கொள்ளலாம்அப்படியொரு ஆணாதிக்கப் பாடல்மன்னிக்கவும் ‘அன்புள்ள’ ஆணாதிக்கப் பாடல்

நதியேநதியேகாதல் நதியே நீயும் பெண் தானே!’ இந்தப் பாடல் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறேன். ‘மூங்கில் காடுகளே’ பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தால் அடுத்து இந்தப் பாடல் வரும்கேட்டால் இயற்கையைஇரசிக்கும் பாட்டாம்இயற்கையை மட்டும் அந்தப் பாட்டில் இரசித்திருந்தால் தான் பரவாயில்லையே.

போயும் போயும் இந்தப் பாடலை சிலேடை என்று என் தமிழ் மனம் ஒரு காலத்தில் சிலாகித்ததை நினைத்தால்தான் செம கடுப்பாக இருக்கிறது

//நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே// 
சரி சரிஅண்ணன் காட்டாற்று வெள்ளம் போலப் புரண்டு வரும் பெண்களின் ஆற்றல் பற்றிப் பேசப் போகிறார்போல என்று நாம் நினைப்போம்.

//நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ// 
அடடேஅடடேஅட்டட்டட்டேஏன்பாஉங்களுக்கு இந்த படிச்சா மருத்துவர்பாடம் சொல்லிக்கொடுக்கிறஆசிரியர்விமான ஓட்டுனர் இவங்கெல்லாம் கண்ணுக்கு தெரிய மாட்டாங்களாஅது சரிபொண்ணுனாசமஞ்சு மணந்து சமைச்சு கொட்டி சாகனும்குழந்தை பெத்துக்காம தத்தெடுக்குற பெண்கள் எல்லாம் தாயேஇல்லையாஎன்னங்கயா உங்க நியாயம்

// வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே// 
// வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே//
பெண்களுக்கு இருக்கிறது இரண்டு குணங்கள் தான்வளைவுகள் மேடு பள்ள இதையெல்லாம் மறச்சுட்டுபாட்டுபடிச்சிட்டு இருக்கிறது 😡

//தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே//
இதுக்கு எதுக்கு நீங்க பாட்டெல்லாம் எழுதுனும்

நாகரிகங்கள் தோன்றி மறையக் காரணமான ஆறுகளோடு ஒப்பிட ஆயிரம் காரணம் இருந்தாலும்இவங்கசொல்ற காரணத்த எல்லாம் கொஞ்சம் பாருங்களேன்இதுக்கு ஒரு சொம்புத் தண்ணியோட ஒப்பிடவேண்டியது தானேஎதுக்கு நதி கிதினு எல்லாம் பேசனும்

//நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்// கடைசியா ஒப்புக்குசப்பாணியா இந்த வரிநம்ம தலைவர் படம் முழுக்க சாதிப் பாட்ட வச்சு அதப் போற்றிப் பாடிட்டுகடைசியாபுள்ள குட்டிய படிக்க வைக்க சொல்லுவாரேஅந்த மாதிரி

அது சரி இந்தப் படத்தில் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்திரையரங்கில் குடும்பத்தோடு படம் கூட பார்க்கவிடாமல் பின்னால் வந்து தொந்தரவு செய்பவன் செய்பவன் மேல் தான் தலைவிக்கு காதல் வரும் (Stalking). கணவர் இறந்து அவளுக்கு மருமணம் ஆக வேண்டும்குழந்தை வேண்டும்அதனால் கணவன் திருமணமானஅன்றே இறந்துவிடுவான்அவள் குழந்தையைத் தத்தெடுத்து விதவையாக வளர்ப்பாள். ‘எங்கவா பூண்டுவெங்காயம் சாப்பிட மாட்டா’ என்ற மாமியார் வந்து அழைத்தவுடன் அந்தப் பெண்ணும் போய்விடுவார். ‘பூண்டுவெங்காயம் சாப்பிடாத வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையா?’ என்று கொஞ்சமும் யோசிக்காமல்மாமியாருடன் போய்விடுவார்பிறகு அவர் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்துகொள்வார்இதைத்தான்முதல் பாடலிலேயே ‘தலைவனிடம் பாயாகிசேயிடம் தாயாகிகாய்ச்சால் வந்தால் நோயாகிநீயாகி நாயாகி’ என்றெல்லாம் foreshadowing செய்திருப்பார் இயக்குனர்.

அடிப்படை இது தான்புரட்சிகள் எதுவும் நடந்துவிடக்கூடாதுபெண்கள் முன்னேற்றம் என்றெல்லாம் எதுவும்நடந்துவிடவே கூடாதுகாடாற்று வெள்ளமாகஅணையை நிறைக்கும் ஆறாக எல்லாம் பெண்கள் ஆகிவிடவேகூடாதுஇந்தக்கருத்துக்கள் எல்லாம் வளர்ந்துவிட்டால் என்ன செய்வதுஅதற்குத் தான் இந்த அன்புள்ளஆணாதிக்கம்ஆணாதிக்கத்தை அனைவரும் இனங்கண்டு விடுவர்ஆனால் இது அனைவரின் பார்வையையும்தப்பிவிடும்

இதெல்லாம் உங்களோட அழகுஇதெல்லாம் மட்டும் தான் உங்களோட அழகு’ என்று மீண்டும் மீண்டும்பிற்போக்குத்தனத்தைப் பதியவைத்துக் கொண்டிருப்பதே இவர்கள் வேலைஇந்தப் பாட்டின் இசையை மட்டும்வைத்துக்கொண்டு இந்த வரிக் குப்பையை எங்காவது தூரக் கொட்டிவிட்டால் நன்றாக இருக்கும்.




Sunday 2 June 2019

பரிணாமக் கொள்கை - கேள்வி பதில் 5

கேள்வி: உலகில் இருக்கும் உயிரினங்கள் அனைத்துமே இன்னொரு உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவையா?

பதில்:
ஆம். தற்போது உலகில் இருக்கும் உயிரினங்கள் அனைத்துமே இன்னொன்றிலிருந்து பரிணமித்தது தான். சுருக்கமாக சொல்லப் போனால் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒற்றை மூதாதை ஒன்று உண்டு.

ஏற்கனவே ஒரு பதிலில் நமக்கும் இந்தியாவில் இன்று வாழும் குரங்குகளுக்கும் எவ்வளவு தலைமுறை தள்ளி உறவு என்பதை எழுதியிருந்தேன். நாமும் சிம்பான்சிகளும் ஒன்று விட்ட சகோதரர்கள், அதாவது காலத்தில் பின்னோக்கிச் செல்லும் போது இவர்களுடைய  ஒருகட்டத்தில் இவர்களுடைய மூதாதை தான் நமக்கும் மூதாதை.  

இப்படி நமக்கும் அவர்களுக்குமான கடைசி பொது மூதாதை இருந்த இடத்தை சந்திக்கும் புள்ளி (Rendezvous point) என்கிறார்கள். நமது இனத்தில் இருந்து பின்னோக்கிப் போனால் ஒன்றாம் புள்ளியில் சிம்பானிசிகளோடு இணைகிறோம். இதே போல இன்னும் பின்னோக்கிப் போனால் ஐந்தாம் புள்ளியில் இந்தியாவில் இன்று வாழும் குரங்குகளோடு இணைகிறோம். இது கிட்டத்தட்ட 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு.

இதே போல பின்னோக்கிப் போகும் நாப்பதாம் புள்ளியில் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களோடு இணைகிறோம். அதாவது அங்கு தான் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களின் கடைசிப் பொது மூதாதையை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கிறோம். இன்று உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுமே அந்தப் பொது மூதாதையின் வாரிசுகள் தான். அதாவது உலகில் இன்று உள்ள அனைத்து உயிரினங்களுமே கிட்டத்தட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒற்றைச் செல்லில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று கிளைத்து உருவானவையே.

உயிரினங்களை மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரிக்கின்றனர் ( Archaea, Bacteria, Eukarya). 23 வகைப் புரதங்கள் இம்மூன்று பிரிவுகளில் உள்ள அனைத்து வகை உயிரினங்களிலும் காணப்படுகின்றன. இம்மூன்று பிரிவுகளுக்கு இடையே மரபணு தொடர்வரிசையில் (DNA sequence ) சிறு சிறு மாற்றங்கள் இருந்தாலும், இந்த 23 புரதமும் இம்மூன்று பிரிவிற்கும் பொதுவானவையே. இந்த 23 புரதமும் தான் செல்களின் அடிப்படைச் செயல்களான மரபணு பிரதியெடுத்தல் போன்ற உலகின் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையான செயல்களைச் செய்கின்றன.

இப்படி உயிர்களுக்குத் தேவையான மிக முக்கியமான 23 புரதங்கள் மூன்று பெரும் பிரிவுகளிலும் காணப்படுவதால், உலகின் அனைத்து உயிர்களுக்கும் பொது மூதாதை ஒன்று இருந்திருக்க வேண்டும். அந்த ஒற்றை மூதாதையிலிருந்து வெவ்வேறு சடுதி மாற்றங்கள் மூலம் இப்பொழுது இருக்கும் புரதங்களும் மரபணு தொடர்வரிசையும் தோன்றியிருக்க வேண்டும்.

ஏன் ஒற்றை மூதாதையில் இருந்து இல்லாமல், ஒவ்வொரு பெரும் பிரிவும் தனித்தனியாகத் தோன்றியிருக்க கூடாதா? இந்த 23 புரதங்களின் ஒற்றுமையும் வெறும் தற்செயலான ஒன்றாக இருக்கக் கூடாதா? இருக்க வாய்ப்பு மிக மிக குறைவு என்கிறார்கள். எவ்வளவு குறைவு தெரியுமா? ஒன்றிற்கு பின் 2680 பூசியங்கள் போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒரு பங்கு தானாம். மனிதர்கள் வேறு எந்த உயிர்களில் இருந்து பரிணாம வளர்ச்சி அடையாமல், தனியாகத் தோன்றியிருக்க எவ்வளவு வாய்ப்பு தெரியுமா? 1 க்கு பிறகு 6000 பூசியம் போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒரு பங்கு தான்.

பரிணாமக் கொள்கை பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இது போல எளிய விளக்கம் சொல்ல முயலலாம்.

Friday 31 May 2019

பரிணாமக் கோட்பாடு - கேள்வி பதில் 4

கேள்வி: குரங்கிற்கு அறிவு வளர்ந்து மனிதன் ஆவது தானே பரிணாம வளர்ச்சி? (அ) பரிணாம வளர்ச்சி என்பது ஒரு உயிரினம் தன்னை அறிவிலோ உடலமைப்பிலோ மேம்படுத்திக் கொள்வது தானே?
பதில்: பரிணாமக் கொள்கையைப் பற்றிய மிகத்தவறான புரிதல்களுள் இதுவும் ஒன்று. குரங்குகளுக்கும் நமக்கும் உள்ள அறிவு வேறுபாட்டிற்குக் காரணம் நாம் பரிணமித்து மேம்பட்டவர்கள் ஆகிவிட்டோம் என்பதல்ல, அவையும் நாமும் பரிணாம வளர்ச்சியில் வெவ்வேறு விதமாகக் கிளைத்துச் சென்றுவிட்டோம் என்பது மட்டுமே.
பரிணாம வளர்ச்சி என்பது நாம் மேம்பட்ட உயிர்கள் என்று கருதக்கூடியவற்றை உருவாக்குவதை நோக்கியே என்பது தவறான புரிதல்.
பரிணாம வளர்ச்சி என்பது எப்போதுமே சிக்கலான உடலமைப்பைக் கொண்ட உயிர்களை உருவாக்குவதை நோக்கியோ அறிவில் தேர்ந்த உயிர்களை உருவாக்குவதை நோக்கியோ நகர்வது அல்ல. அறிவுள்ளவை பிழைக்கும்; வலியவை பிழைக்கும்; திறமையானவை பிழைக்கும்; என்றெல்லாம் இல்லை. தக்கது தான் பிழைக்கும். அதாவது புறச்சூழலுக்கு எந்த உயிரினத்தால் தாக்குக் கொடுக்க முடிகிறதோ, இனப்பெருக்கம் செய்து தன் வாரிசுகளை விட்டுச் செல்ல முடிகிறதோ அவற்றால் மட்டுமே பிழைக்க முடியும்.
"கண்ணில்லாத உயிரனத்திற்கு கண் கிடைப்பதும், மூளையில்லா உயிரனத்திற்கு மூளை வளர்வதும் தானே பரிணாம வளர்ச்சி" என்று நம்புவீர்களானால் அது மிகவும் தவறு. குகைமீன்கள் (Cavefish) பரிணாம வளர்ச்சியின் போது தங்களது கண்களை இழந்துவிட்டன. காரணம் இருட்டில் அவற்றிற்கு கண்களால் எந்தப் பலனும் இல்லை. அதே போல நிறமிகளையும் இழந்துள்ளன. இருட்டில் கண்களுக்கும் நிறமிகளுக்கும் வேலையில்லாத போது அவற்றால் நன்மைகள் எதுவும் இல்லை, மாறாக அவற்றால் ஆற்றல் தான் விரயமாகும். உணவுத் தட்டுப்பாடு உள்ள ஓரிடத்தில் ஆற்றலை விரயமாக்கும் சிக்கலான உடலுறுப்புகளை இழக்கும் உயிரினங்களே பிழைக்கும் நெருக்கடி இருப்பது தான் அம்மீன்கள் கண்களையும் நிறமிகளையும் இன்னும் சிலவற்றையும் இழந்ததற்குக் காரணம்.
சில ஆராய்ச்சியாளர்கள் ஒரு உயிரனத்திற்குப் போட்டியோ தேர்வழுத்தமோ குறைந்திருக்கும் காலத்தில் தான் அது சிக்கலான அதிக ஆற்றல் எடுக்கும் மாற்றங்களை நோக்கி நகர்கின்றன என்று கருதுகிறார்கள். அந்த உயிரனத்திற்குத் தீங்காக அமையக் கூடிய அல்லது பயன் தராத சில சடுதி மாற்றங்கள் களையப்படாமல் பரவ வாய்ப்பு அதிகம். அப்படிப் பரவி அந்த உயிரனத்தின் உடலமைப்பையும் செயற்பாட்டையும் சிக்கலாக்கலாம் (மனிதர்களின் கண்ணுக்கு இந்த complexity மேம்பாடாகத் தெரியலாம்).
ஆனால் தேர்வழுத்தம் அதிகமாக இருக்கும் காலத்தில் இது போன்ற வேண்டாத சடுதி மாற்றங்கள் களையப்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால் எளிமையை நோக்கி ஒரு உயிரினம் பயணிக்கும் வாய்ப்பதிகம்.
இதையும் பார்க்கலாம். உணவுப் போட்டியும்  இரையாடிகளின் அச்சுறுத்தலும் குறைந்த பப்புவா நியூ கிணா தீவில் வாழும் பறவைகள் இணையை ஈர்க்க மட்டுமே பயன்படும் உடலமைப்புகள் மற்றும் செயற்பாடுகள் பலவற்றைக் கொண்டுள்ளன. இதை மேலே சொன்ன மீன்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புலப்படும்.
மனிதர்கள் மேம்பாடு என்று எதைக் கருதுகிறார்களோ அதை நோக்கி பரிணாம வளர்ச்சி பயணிப்பதில்லை. இந்தப் புரிதல் சரியாக இல்லாத காரணத்தால் தான் 'இன்றைய குரங்கிலிருந்து மேம்பட்ட version தான் மனிதர்கள். இன்றைய குரங்குகள் பரிணமிப்பதை நிறுத்திவிட்டன, பரிணமித்தவை மனிதர்களாகிவிட்டனர்' போன்ற சில தவறான கருத்துகள் நிலவுகின்றன.
பரிணாமக் கொள்கை பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இது போல எளிய விளக்கம் சொல்ல முயலலாம்.

Wednesday 29 May 2019

பரிணாமக் கோட்பாடு - கேள்வி பதில் 3

கேள்வி: பரிணாம வளர்ச்சி ஏற்பட பல கோடி ஆண்டுகள் ஆகும் தானே? (அல்லது) இப்போழுதும் பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறதா?
பதில்: இரண்டு கேள்விக்கும் சேர்த்தே பதில் எழுதலாம். பரிணாம வளர்ச்சி என்பது ஏதோ விண்கல் தாக்குவது போல ஒரு நாள் நடந்து முடியும்/முடிந்த நிகழ்வன்று. அது நாள்தோறும், நொடிதோறும் நடந்து கொண்டேயிருக்கும் ஒன்று.
சில ஆண்டுகள் கழித்து உங்கள் நண்பர் ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு வருகிறார். வந்து உங்களது மகனைப் பார்த்ததும் 'அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டானா?' என்று வியப்பாகக் கேட்கிறார். ஆனால் உங்களுக்கோ உங்களது நேற்று பார்த்தது போலவே தான் இருப்பான். நேற்று கேட்டிருந்தால் அதற்கு முதல் நாள் இருந்தது போலவே தான் உங்களுக்குத் தெரிந்திருப்பான். உங்களது மகன் நாள் தோறும் மாறிக் கொண்டே தான் இருக்கிறான், ஆனால் பார்த்துக் கொண்டே இருப்பதனால் எதுவும் புதிதாகத் தெரிவதில்லை.

இதே போலத் தான் உலகில் உள்ள உயிர்கள் அனைத்துமே தனது சூழலுக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கின்றன. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றித் தகவமைத்துக் கொண்டு இனப்பெருக்கம் செய்து தனது வாரிசுகளை விட்டுச் செல்லும் உயிர்களே பிழைக்கின்றன. அப்படி மாற்றிக் கொள்ள முடியாமல், இனப்பெருக்கம் செய்து வாரிசுகளை விட்டுச் செல்லாத உயிர்கள் அழிந்து போகின்றன. அதனால் தான் தக்கதே பிழைக்கும்.
உலகின் முதல் உயிர் தோன்றிய நாளில் இருந்து பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கு அது நடப்பது தெரியவில்லை என்றாலும் நடக்கும்/நடக்கிறது. உலகில் இவ்வளவு உயிர்கள் எப்படி தனக்கே உரிய தன்மையோடும் உடலமைப்போடும் தோன்றியிருக்க முடியும் என்ற கேள்விக்கான விடை தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை.
பரிணாம வளர்ச்சிக் கொள்கையைக் கொண்டு மட்டுமே உலகில் உயிர்களின் தோற்றத்தையும் பரவலையும் விளக்க முடியும்.

ஆக பதில் இது தான். பரிணாம வளர்ச்சி என்பது ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னாலும் நடந்தது, இன்றும் நடக்கிறது, இனப்பெருக்கம் செய்யும் உயிர்கள் உள்ள வரை நடக்கும். அது ஒரு வினைத்தொகை போல முக்காலத்துக்கும் பொருந்தும்.

Tuesday 28 May 2019

குழந்தைகள் பெயர்கள் - திருக்குறள்

திருக்குறளில் வரும் சொற்களை வைத்து குழந்தைகளுக்கு சூட்டக்கூடிய அழகுத் தமிழ்ப்பெயர்களைக் கீழே தொகுத்துள்ளேன். சூட்டி மகிழுங்கள்!

பனுவலன்
அகர முதல்வன்
வாலறிவன்
நிறைமொழியான்
மாசிலன்
அறன்
நயனுடையான்
பெருந்தகையான்
வித்தகன்
அதினன்
திண்
தகை
இன்சொலன்
இனியசொலன்
ஆற்றலன்
செப்பன்
பேரறிவாளன்
நீள்புகழன்
ஈதல் உவகையான்
நல்லளி
ஒளியிழை
வள்ளி
நலத்தகை
செவ்வி
மணி
திகழ்
மடந்தை
அணி
காரிகை
வேந்தன்
பணிமொழி
நறுமலர்
கவின்
பைந்தொடி
அழல்
ஆயன்
மதி
பெருமகிழ்
துறைவன்
பாவை
ஆயிழை
அனிச்சம்
மாணிழை
அன்னம்
அணியிழை
சேயிழை
ஆய்மயில்
வியன்
நயன்
குண நலன்
நூல்நயன்
வெல்படை வேந்தன்
மதிநுட்பன்
நாநலன்
சொலல்வல்லன்
அஞ்சான்
நூல்வல்லன்
உயர்வுள்ளன்