Monday 29 August 2016

புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..

ஒரு நூலின் அட்டைப்படம் அந்நூலை என்னை படிக்கவிடாமல் செய்யும் கதை.
"புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
உடைந்த காதும் உலர்ந்த முகமுமாய்,
மூடிய விழியும் முழு நீள மௌனமுமாய்,
புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
குமுறும் எண்ணங்களையும் குழறும் சொற்களையும்
குறுஞ்சிரிப்பில் ஒளித்து வைக்குமொரு
பெண்ணின் மெய்ப்பாட்டோடு
புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
பிரபஞ்சனின் நூலின் அட்டைப்படத்தில்
அமர்ந்து சாலை மறியல் செய்யும்
புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
எங்கு என் விரல் பட்டு
அமைதி விடுத்து அவன் சொல்லாமல் போனதை சொல்லிவிடுவானோ
எனத் தயங்கி நிற்கிறேன்...
அட்டையை வெறிக்க வெறிக்க பார்த்துவிட்டு
நூலை ஓரமாய் வைக்கிறேன்..  இன்று
நிறைய படித்துவிட்டேன் என்று.."
சுபா