Friday 24 May 2013

தாராசுரம் கோயில் படங்கள்


இந்தப் படங்கள்


தாரசுரம் ஐராவிதேசுவரர் கோயிலில் எடுக்கப்பட்டது...

மரத்திலும் உலோகத்திலும் சின்னதாய் ஒரு சாளாரம் செய்யவே பல சிரமும் உண்டு. ஆனால் கல்லில் சாளரம் அமைத்தது நம் தமிழகத்தில் மட்டும் தான் சாளாரம் கல்லில் செய்தனர்... இல்லை இல்லை அதனை கல்லில் செதுக்கினர்... கல்லிலே கலை வண்ணம் கண்டார்..

குறிப்பு: சாளரம்=ஜன்னல்.






Thursday 23 May 2013

தஞ்சைபெரியகோயிலும் அரிய தகவலும்-2 (நந்தி)















பெரிய கோயிலில் பக்தர்கள் இப்போது தரிசிக்கும் மகாநந்தி, இராசராசன் காலத்தியது அல்ல. அந்த நந்தி இப்போது தென்மாளிகைச் சுற்றில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது இருக்கும் நந்தியை கி.பி. 1550 களில் நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கரும், அவர் மகன் அச்சுதப்ப நாயக்கரும் இணைந்து எழுப்பியுள்ளனர்.

பதினாறு கால் மண்டபத்தில் மாபெரும் உருவமாக அமைந்துள்ளது இந்த நந்தி. துல்லியமாக பத்தொன்பதரை அடி நீளமும், எட்டே கால் அடி அகலமும், பன்னிரெண்டடி உயரமும் உடைய மகாநந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பு.

Sunday 19 May 2013

தஞ்சை பெரிய கோவிலும் அரிய தகவல்களும்-1, (அறிஞர் ஹீல்ஷின் பங்கு)


200 ஆண்டுகளுக்கு முன்பு வரைத் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர் யாரென்றே தெரியாத நிலை நிலவியது. 'கிருமி கண்ட சோழன்' எனப்படும் கரிகாலன் குஷ்டநோயால் தவித்ததாகவும், இந்தக் கோயிலைக் கட்டி, இங்குள்ள சிவகங்கையில் நீராடியதால் அவனுக்கு இருந்த குஷ்டநோய் நீங்கியதாகவும் 'பிரகதீஸ்வர மகாத்மியம்', 'தஞ்சைபுரி மகாத்மியம்' ஆகிய நூல்கள் சொல்லுகின்றன. இது போதாதென ஜி.யு. போப்பும் தன் பங்கிற்கு 'காடுவெட்டிச் சோழன்' என்பவனே பெரிய கோயிலைக் கட்டியவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

1888 இல் தான் ஹீல்ஷ் என்ற ஜெர்மானிய அறிஞரை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக நியமித்தது சென்னை அரசாங்கம். கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்த அவர் தான் "இக்கோயிலைக் கட்டியவன் மாமன்னன் இராசராசன்" என்று அறிவித்தார்.

Friday 17 May 2013

கடைசி நாள் கல்லூரி... GCT !!!


















GCT !!!
சிறகுகள் முளைக்கக் காத்திருந்தேன்
பறக்கக் கட்டளையும் வந்ததும்...
சிறகுகள் ஏனோ சுமையானது...
பிரிவின் பாரமோ இது???
தாங்காத போதிகளுடன் மனம்
தள்ளாடி நகர்கிறது...
தெரிந்த முடிவு...
தெரிந்தும் தாழவில்லை...
நினைவுகள் மட்டும் நிலைத்திருக்க
நாளையோடு எல்லாம் வேறாகிப் போகும்...

கடைசி நாள் கல்லூரி...
பேருந்தின் ஜன்னல் நனைக்கும் மழைத்துளி..
கண்களின் ஓரம் ஏனோ நீர்த்துளி...
முன்நோக்கி நகரும் தினத்தில்,
பின்நோக்கி நகருது மனது....

இங்கு மீண்டும் ஒருமுறை பயில்வேனோ,
பக்கங்களைத் திருத்தி எழுத முயல்வேனோ,
முடியாமல் போகுமின் அமைதியில் துயில்வேனோ??

பிடிபடாத எண்ணங்கள் சிறைபிடிக்க
பிடிவிலகிப் போகிறேன் நான்....
கூடுடைத்து சிறகொடிந்த பட்டாம்பூச்சியாய்
படபடத்து செல்கிறேன் நான்...

அணுவெல்லாம் காதல்...(ATOMIC LOVE)

இதயத்தில் அணு அளவும் இடமில்லயே
என் அணுவில் கூட இடமில்லயே..

போசோன்கள் லெப்டான்கள் துரத்திவிட்டாய்
நியூட்ரான் எலெக்ட்ரான் இடை
வெற்றிடம் கூட நிரப்பிவிட்டாய்..
என் அணுவில் கூட இடமில்லயே..

ிச்சயமில்லா கொள்கை அதனாலும்
என் காதலை விளக்கிட முடியலயே..
ியூட்டன் ஐன்ஸ்டைன் விதிகள்
எதுவும் இங்கே பொருந்தலயே..

உனை பார்க்கையிலே உயிருக்குள்
போட்டான்கள் பிறக்கிறதே..
ாறிலி எல்லாம் மாறியதே..
கடவுள் துகள் கூட
ாற்றில் இப்போ தெரிகிறதே...

நீ பார்கையிலே, எனக்கு
ஒளியின் வேகம் குறைகிறதே
காலங்கள் யாவும் நீள்கிறதே
என் காதல் விசையினிலே
வெளியும் இங்கே வளைகிறதே...

ெண்ணே! அடி பெண்ணே!
அணு ஆயுதம் நீ தானோ??  உன்
சோதனைக் கூடம் நான் தானோ??

காதல் என்னும் பெயரினிலே
அணுப்பிளப்பு என்னுள் நிகழ்கிறதே...
ஆற்றல் யாவும் இழந்தேனே..
பௌதிகம் முதலிய மறந்தேனே..

விழுந்துவிட்டேன் உன் விழியாலே
விளக்கிவிட்டேன் அதனை மொழியாலே..
என் அணுவில் கூட இடமில்லயே..
உன்னைத் தவிர எதுவும் நினைவில்லையே..

-சுபாசினி.

Sunday 12 May 2013

என்னோடு நீ வேண்டும்...


என்னோடு நீ வேண்டும்...

என் மலருக்கு மரமாக
மரத்துக்கு வேராக
என்னோடு நீ வேண்டும்...

என் அம்புக்கு வில்லாக
வில்லுக்கு நாணாக..
என்னோடு நீ வேண்டும்...

என் வானத்து மழையாக
மழைக்குக் குடையாக..
என்னோடு நீ வேண்டும்...

என் நகரத்து ஆறாக
ஆற்றுக்கு நீராக
என்னோடு நீ வேண்டும்...

என் நாவுக்கு மொழியாக
மொழிக்குத் தமிழாக
என்னோடு நீ வேண்டும்...

என் கவிதைக்கு சொல்லாக
சொல்லுக்குப் பொருளாக
என்னோடு நீ வேண்டும்..

என் வாழ்க்கைக்கு மெய்யாக
மெய்க்கு உயிராக..
என்னோடு நீ வேண்டும்..

சுபாவிற்கு நினைவாக
கலையாத கனவாக..
என்னோடு நீ வேண்டும்...


Monday 6 May 2013

திருக்குறள் சொல்லும் நாகரிகம்


நாகரிகம் என்பது என்ன??
திருக்குறளில் நாகரிகம் என்னும் சொல் வரும் இடம் இதுதான்.

"பெயக்கண்டு நஞ்சுண் டமையவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் " - குறள் 580
அதிகாரம் 58. கண்ணோட்டம்.


நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - எல்லாராலும் விரும்பப்படத்தக்க நாகரிகப் பண்பாகிய கண்ணோட்டத்தை வேண்டுபவர்; நஞ்சு பெயக்கண்டும் உண்டு அமைவர் - தம் நண்பர் தமக்குத் தம் கண்முன் நஞ்சிடக் கண்டும் அதை மறுக்காது உண்டு பின்னும் அவரொடு அன்பாகப் பொருந்துவர்.

இதனை இக்காலாத்திற்கு பொருத்திப் பார்ப்போம் ஆயின் இப்படி எடுத்து கொள்ளலாம். ஒரு குழந்தை பிறந்த தினத்திற்கு இனிப்பு கொண்டு வருகிறது. நமக்கோ நீரிழிவு நோய். இனிப்பைத் தவிர்க்க வேண்டும். ஆனால் வேண்டாம் என்று சொல்லாமல் அந்த குழந்தைக் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக அதனை எடுத்து உண்கிறோம். இனிப்பு எனக்கு நஞ்சு என்று தெரிந்தும் பிறர் மனம் நோகக் கூடாது என்று எண்ணி உண்கிறோமே அது தான் நாகரிகம். (பர்வீன் சுல்தானா அவர்கள் அரசினர் தொழில்நுடபக் கல்லூரி, கோவை, சங்கமம் விழா பட்டிமன்றத்தின் போது ஆற்றிய உரையிலிருந்து கொள்ளப்பட்டது)

சான்றோர் விளக்கம்:
'நயத்தக்க நாகரிகம் 'என்றதனாலும் , 'அமைவர் ' என்றதனாலும் , நஞ்சிட்டவர் நண்பர் என்பது உய்த்துணரப்படும். திருவள்ளுவர் தம் நூலை எல்லார்க்கும் பொதுவாக இயற்றியதனால் , இப்பொருட்பாலில் அரசர்க்குரியவற்றோடே ஏனையர்க் குரியவற்றையுஞ் சேர்த்தே கூறியுள்ளாரென்றும், இவ்வதிகாரத்தின் இவ்விறுதிக் குறள் தனிப்பட்ட சான்றோர் ஒழுக்கம் பற்றிய தென்றும் , அறிந்து கொள்க. நண்பரிட்ட வுணவாதலால் அது அவர் அறியாதிட்ட நஞ்சென்றும் ,நட்புப் பற்றிய கண்ணோட்டத்தாலேயே அது உண்ணப் பெறுமென்றும் , அதுவும் இயற்கைக்கு மிஞ்சியதாதலால் 'நயத்தக்க ' என்னும் அடைபெற்றதென்றும் , அறியப்படும் . அறிந்திட்ட நஞ்சாயின் அது நண்பர் செயலாகாமை அறிக. நயத்தகுதல் பகைவராலும் பாராட்டப் பெறுதல்.



நாகரிகம் என்பது இங்கு அகநாகரிகமான பண்பாட்டை , கண்ணோட்டம் பண்பாட்டுக் குணமாதலின் நாகரிகமெனப் பட்டது.

"முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சு முண்பர் நனிநா கரிகர்"

என்பது நற்றிணை(355).பெய்தும் என்னாது 'கண்டும் 'என்றதனால் , உம்மை உயர்வு கலந்த எச்சமாம்.