Monday 27 January 2014

திருக்குறளும் அரும்பதங்களும்-3 (எச்சம்)

அகழ்வாய்வில் எச்சம் என்பது ஒரு Fossils என்னும் சொல்லின் தமிழாக்கமாக அமைந்தாலும் , திருக்குறளில் எச்சம் என்னும் சொல் புகழைக் குறிக்கிறது. எஞ்சி நிற்கும் இசை, புகழ் என்னும் பொருள்படும்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (குறள்- 114)

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. (குறள்- 112)

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. (குறள்- 1075)

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. (குறள்- 1012)

எச்சம் - புகழ்

Thursday 23 January 2014

ஏறுபோல் பீடு நடை!!!


ஏறுபோல் பீடு நடை!!!
என்ன ஒரு அழகான சொற்றொடர். நிமிர்ந்து நடக்கும் காளை போல் பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து வாழும் ஒரு நிலையைக் குறிக்கும் வரி. இது இடம்பெற்ற நூல் வேறு எதுவும் இல்லை. நம்  திருக்குறள் தாம்.
காங்கேயம் காளை படையப்பா படத்தில் நடந்து வருவது போன்ற ஒரு காட்சி கண் முன் தோன்றுகிறது அல்லவா??



(புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. குறள் - 59)

Saturday 18 January 2014

திருக்குறளும் அரும்பதங்களும்-2 (விசும்பு)

வானம் என்னும் சொல்லுக்கு நமக்கு தெரிந்த தமிழ் சொற்கள் பல உண்டு. அதில் வழக்கில் இல்லாத ஒரு சொல் விசும்பு.

விசும்பு - வானம்.

குறள்:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

(வான்சிறப்பு, குறள்: 16)

விளக்கம்:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

கூடுதல் தகவல்: 
"விசும்பு" ஜெயமோகன் எழுதிய 12 அறிவியல் புனைகதைகளின் தொகுதி. இக்கதைகள் திண்ணை இணைய இதழில் வெளியானவை.