Thursday, 4 July 2013

துன்ப மூட்டை

இது ஆறாம் வகுப்புப் படிக்கும் போது பள்ளி வழிபாட்டுக்குக் கூட்டத்தில் ஒரு ஆசிரியை சொன்ன கதை. இது எந்த ஞானியால் சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை, பலரும் இதைக் கேட்டிருப்பார்கள்.

" ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்றனர்,  அவனுக்கு அது இருக்கிறது எனக்கு இல்லை' இவ்வாறு சொல்லிக்கொண்டே இருந்தனராம்.. அவரும் பொருமையிழந்து மக்கள் அனைவரையும் வரவழைத்து, " உங்கள் துன்பத்தை எல்லாம் நாளை ஒரு மூட்டையில் கட்டி இந்த இடத்திற்கு எடுத்து வாருங்கள், அவற்றைப் போக்குகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். மறுநாள் மக்கள் அனைவரும் அவரவர் துன்ப மூட்டையை எடுத்துக்கொண்டு கடவுளைப் பார்க்க சென்றனராம். கடவுள் அவர்களிடம் " உங்கள் துன்ப மூட்டையை இங்கு வைத்துவிட்டு வேறு யாருடைய துன்ப மூட்டையாவது எடுத்துச் செல்லுங்கள்" என்று கூறிவிட்டார். மக்களும் அவரவர் மனதில் யாரெல்லாம் 'மகிழ்ச்சியாக வாழ்கின்றனர், நமக்கும் அந்த வாழ்வு கிடைக்காதா' என்று எண்ணி ஏங்கி கொண்டிருந்தனரோ அவர்களது துன்ப மூட்டையை எடுத்து கொண்டு மகிழ்ச்சியாக சென்றுவிட்டனராம். இரண்டே நாட்களில் மக்கள் அனைவரும் கடவுளிடம் திரும்பி வந்து " எனக்கு என் பழைய துன்ப மூட்டையையே கொடுங்கள், அது இதற்கு பரவாயில்லை, குறைந்தது அது எனக்கு பழகிப் போன துன்பம் , இது மிகவும் கடுமையாக இருக்கிறது" என்று சொல்லி தன் பழைய துன்ப மூட்டையே கேட்டனராம்..."

என்னை ஆழமாக பாதித்த கதை இது... உண்மையும் கூட....

Friday, 24 May 2013

தாராசுரம் கோயில் படங்கள்


இந்தப் படங்கள்


தாரசுரம் ஐராவிதேசுவரர் கோயிலில் எடுக்கப்பட்டது...

மரத்திலும் உலோகத்திலும் சின்னதாய் ஒரு சாளாரம் செய்யவே பல சிரமும் உண்டு. ஆனால் கல்லில் சாளரம் அமைத்தது நம் தமிழகத்தில் மட்டும் தான் சாளாரம் கல்லில் செய்தனர்... இல்லை இல்லை அதனை கல்லில் செதுக்கினர்... கல்லிலே கலை வண்ணம் கண்டார்..

குறிப்பு: சாளரம்=ஜன்னல்.






Thursday, 23 May 2013

தஞ்சைபெரியகோயிலும் அரிய தகவலும்-2 (நந்தி)















பெரிய கோயிலில் பக்தர்கள் இப்போது தரிசிக்கும் மகாநந்தி, இராசராசன் காலத்தியது அல்ல. அந்த நந்தி இப்போது தென்மாளிகைச் சுற்றில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது இருக்கும் நந்தியை கி.பி. 1550 களில் நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கரும், அவர் மகன் அச்சுதப்ப நாயக்கரும் இணைந்து எழுப்பியுள்ளனர்.

பதினாறு கால் மண்டபத்தில் மாபெரும் உருவமாக அமைந்துள்ளது இந்த நந்தி. துல்லியமாக பத்தொன்பதரை அடி நீளமும், எட்டே கால் அடி அகலமும், பன்னிரெண்டடி உயரமும் உடைய மகாநந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பு.

Sunday, 19 May 2013

தஞ்சை பெரிய கோவிலும் அரிய தகவல்களும்-1, (அறிஞர் ஹீல்ஷின் பங்கு)


200 ஆண்டுகளுக்கு முன்பு வரைத் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர் யாரென்றே தெரியாத நிலை நிலவியது. 'கிருமி கண்ட சோழன்' எனப்படும் கரிகாலன் குஷ்டநோயால் தவித்ததாகவும், இந்தக் கோயிலைக் கட்டி, இங்குள்ள சிவகங்கையில் நீராடியதால் அவனுக்கு இருந்த குஷ்டநோய் நீங்கியதாகவும் 'பிரகதீஸ்வர மகாத்மியம்', 'தஞ்சைபுரி மகாத்மியம்' ஆகிய நூல்கள் சொல்லுகின்றன. இது போதாதென ஜி.யு. போப்பும் தன் பங்கிற்கு 'காடுவெட்டிச் சோழன்' என்பவனே பெரிய கோயிலைக் கட்டியவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

1888 இல் தான் ஹீல்ஷ் என்ற ஜெர்மானிய அறிஞரை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக நியமித்தது சென்னை அரசாங்கம். கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்த அவர் தான் "இக்கோயிலைக் கட்டியவன் மாமன்னன் இராசராசன்" என்று அறிவித்தார்.

Friday, 17 May 2013

கடைசி நாள் கல்லூரி... GCT !!!


















GCT !!!
சிறகுகள் முளைக்கக் காத்திருந்தேன்
பறக்கக் கட்டளையும் வந்ததும்...
சிறகுகள் ஏனோ சுமையானது...
பிரிவின் பாரமோ இது???
தாங்காத போதிகளுடன் மனம்
தள்ளாடி நகர்கிறது...
தெரிந்த முடிவு...
தெரிந்தும் தாழவில்லை...
நினைவுகள் மட்டும் நிலைத்திருக்க
நாளையோடு எல்லாம் வேறாகிப் போகும்...

கடைசி நாள் கல்லூரி...
பேருந்தின் ஜன்னல் நனைக்கும் மழைத்துளி..
கண்களின் ஓரம் ஏனோ நீர்த்துளி...
முன்நோக்கி நகரும் தினத்தில்,
பின்நோக்கி நகருது மனது....

இங்கு மீண்டும் ஒருமுறை பயில்வேனோ,
பக்கங்களைத் திருத்தி எழுத முயல்வேனோ,
முடியாமல் போகுமின் அமைதியில் துயில்வேனோ??

பிடிபடாத எண்ணங்கள் சிறைபிடிக்க
பிடிவிலகிப் போகிறேன் நான்....
கூடுடைத்து சிறகொடிந்த பட்டாம்பூச்சியாய்
படபடத்து செல்கிறேன் நான்...

அணுவெல்லாம் காதல்...(ATOMIC LOVE)

இதயத்தில் அணு அளவும் இடமில்லயே
என் அணுவில் கூட இடமில்லயே..

போசோன்கள் லெப்டான்கள் துரத்திவிட்டாய்
நியூட்ரான் எலெக்ட்ரான் இடை
வெற்றிடம் கூட நிரப்பிவிட்டாய்..
என் அணுவில் கூட இடமில்லயே..

ிச்சயமில்லா கொள்கை அதனாலும்
என் காதலை விளக்கிட முடியலயே..
ியூட்டன் ஐன்ஸ்டைன் விதிகள்
எதுவும் இங்கே பொருந்தலயே..

உனை பார்க்கையிலே உயிருக்குள்
போட்டான்கள் பிறக்கிறதே..
ாறிலி எல்லாம் மாறியதே..
கடவுள் துகள் கூட
ாற்றில் இப்போ தெரிகிறதே...

நீ பார்கையிலே, எனக்கு
ஒளியின் வேகம் குறைகிறதே
காலங்கள் யாவும் நீள்கிறதே
என் காதல் விசையினிலே
வெளியும் இங்கே வளைகிறதே...

ெண்ணே! அடி பெண்ணே!
அணு ஆயுதம் நீ தானோ??  உன்
சோதனைக் கூடம் நான் தானோ??

காதல் என்னும் பெயரினிலே
அணுப்பிளப்பு என்னுள் நிகழ்கிறதே...
ஆற்றல் யாவும் இழந்தேனே..
பௌதிகம் முதலிய மறந்தேனே..

விழுந்துவிட்டேன் உன் விழியாலே
விளக்கிவிட்டேன் அதனை மொழியாலே..
என் அணுவில் கூட இடமில்லயே..
உன்னைத் தவிர எதுவும் நினைவில்லையே..

-சுபாசினி.

Sunday, 12 May 2013

என்னோடு நீ வேண்டும்...


என்னோடு நீ வேண்டும்...

என் மலருக்கு மரமாக
மரத்துக்கு வேராக
என்னோடு நீ வேண்டும்...

என் அம்புக்கு வில்லாக
வில்லுக்கு நாணாக..
என்னோடு நீ வேண்டும்...

என் வானத்து மழையாக
மழைக்குக் குடையாக..
என்னோடு நீ வேண்டும்...

என் நகரத்து ஆறாக
ஆற்றுக்கு நீராக
என்னோடு நீ வேண்டும்...

என் நாவுக்கு மொழியாக
மொழிக்குத் தமிழாக
என்னோடு நீ வேண்டும்...

என் கவிதைக்கு சொல்லாக
சொல்லுக்குப் பொருளாக
என்னோடு நீ வேண்டும்..

என் வாழ்க்கைக்கு மெய்யாக
மெய்க்கு உயிராக..
என்னோடு நீ வேண்டும்..

சுபாவிற்கு நினைவாக
கலையாத கனவாக..
என்னோடு நீ வேண்டும்...