Friday 17 May 2013

கடைசி நாள் கல்லூரி... GCT !!!


















GCT !!!
சிறகுகள் முளைக்கக் காத்திருந்தேன்
பறக்கக் கட்டளையும் வந்ததும்...
சிறகுகள் ஏனோ சுமையானது...
பிரிவின் பாரமோ இது???
தாங்காத போதிகளுடன் மனம்
தள்ளாடி நகர்கிறது...
தெரிந்த முடிவு...
தெரிந்தும் தாழவில்லை...
நினைவுகள் மட்டும் நிலைத்திருக்க
நாளையோடு எல்லாம் வேறாகிப் போகும்...

கடைசி நாள் கல்லூரி...
பேருந்தின் ஜன்னல் நனைக்கும் மழைத்துளி..
கண்களின் ஓரம் ஏனோ நீர்த்துளி...
முன்நோக்கி நகரும் தினத்தில்,
பின்நோக்கி நகருது மனது....

இங்கு மீண்டும் ஒருமுறை பயில்வேனோ,
பக்கங்களைத் திருத்தி எழுத முயல்வேனோ,
முடியாமல் போகுமின் அமைதியில் துயில்வேனோ??

பிடிபடாத எண்ணங்கள் சிறைபிடிக்க
பிடிவிலகிப் போகிறேன் நான்....
கூடுடைத்து சிறகொடிந்த பட்டாம்பூச்சியாய்
படபடத்து செல்கிறேன் நான்...

No comments:

Post a Comment