Sunday 19 May 2013

தஞ்சை பெரிய கோவிலும் அரிய தகவல்களும்-1, (அறிஞர் ஹீல்ஷின் பங்கு)


200 ஆண்டுகளுக்கு முன்பு வரைத் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர் யாரென்றே தெரியாத நிலை நிலவியது. 'கிருமி கண்ட சோழன்' எனப்படும் கரிகாலன் குஷ்டநோயால் தவித்ததாகவும், இந்தக் கோயிலைக் கட்டி, இங்குள்ள சிவகங்கையில் நீராடியதால் அவனுக்கு இருந்த குஷ்டநோய் நீங்கியதாகவும் 'பிரகதீஸ்வர மகாத்மியம்', 'தஞ்சைபுரி மகாத்மியம்' ஆகிய நூல்கள் சொல்லுகின்றன. இது போதாதென ஜி.யு. போப்பும் தன் பங்கிற்கு 'காடுவெட்டிச் சோழன்' என்பவனே பெரிய கோயிலைக் கட்டியவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

1888 இல் தான் ஹீல்ஷ் என்ற ஜெர்மானிய அறிஞரை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக நியமித்தது சென்னை அரசாங்கம். கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்த அவர் தான் "இக்கோயிலைக் கட்டியவன் மாமன்னன் இராசராசன்" என்று அறிவித்தார்.

No comments:

Post a Comment