Sunday 12 May 2013

என்னோடு நீ வேண்டும்...


என்னோடு நீ வேண்டும்...

என் மலருக்கு மரமாக
மரத்துக்கு வேராக
என்னோடு நீ வேண்டும்...

என் அம்புக்கு வில்லாக
வில்லுக்கு நாணாக..
என்னோடு நீ வேண்டும்...

என் வானத்து மழையாக
மழைக்குக் குடையாக..
என்னோடு நீ வேண்டும்...

என் நகரத்து ஆறாக
ஆற்றுக்கு நீராக
என்னோடு நீ வேண்டும்...

என் நாவுக்கு மொழியாக
மொழிக்குத் தமிழாக
என்னோடு நீ வேண்டும்...

என் கவிதைக்கு சொல்லாக
சொல்லுக்குப் பொருளாக
என்னோடு நீ வேண்டும்..

என் வாழ்க்கைக்கு மெய்யாக
மெய்க்கு உயிராக..
என்னோடு நீ வேண்டும்..

சுபாவிற்கு நினைவாக
கலையாத கனவாக..
என்னோடு நீ வேண்டும்...


No comments:

Post a Comment