Wednesday 9 July 2014

செவ்வான நேரமதில் காத்திருக்கிறேன்

தொடுவானமும் அதனை அங்கே
தொட்டுவிட்ட தென்னையும் மஞ்சள்
வண்ணங் குழைத்தவன் கைபோலே
வண்ணங் கொள்ளும் மாலையிது..

குடம்பை தனித் தொழிந்த
குருவியெல்லாம் கூடுதிரும்பும் வேளையிது...

செம்மலது வாசம் வீசும்
செவ்வான நேரமதில் காத்திருக்கிறேன்
கடல் கடந்து சென்றயென்
கண்ணன் வரும் சாலையெது??

2 comments: