Saturday 5 July 2014

இலக்கணத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? ஆம்.

தமிழ் மொழியையும் அதன் இலக்கணங்களையும் உற்று நோக்கும் போது அது இயற்கையாகத் தானாக பல்லாயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் தோன்றியது எனப் புலப்படும். ஓசைகளின் அடிப்படையில் பிறந்தது. சங்க இலக்கியங்களில் வந்த காதல் தொடங்கி அனைத்தும் இயல்பானவை. அதனால் அதில் இயல்பிற்கு எதிரான செயற்கை விதிகள் எதுவும் இல்லை. கொஞ்சம் கவனம் வைத்தால் அதன் விதிகளைப் பின் பற்றுதல் எளிது.

இப்படி இயல்பான மொழிக்கு நாம் ஏன் இலக்கணத்தைப் பிடித்துக் கொண்டு அழ வேண்டும் என்று தாங்கள் கேட்கலாம்.
ஒரே ஒரு காரணம் தான். நாம் ஏன் சொல்ல வந்ததோமோ அதையே மற்றவரும் புரிந்து கொள்ள வேண்டும். There should not be any communication gap.

நீங்கள் கேட்கலாம் " அத நான் சொல்றது உங்களுக்குப் பிழையா இருந்தாலும் புரியுதே?"
இப்பொழுது உங்கள் காலக் கட்டத்திலேயே நிகழும் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டே தாங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ளுதல் எளிது. ஆனால் இன்னும் சில பல நூற்றாண்டுகள் கழிந்தபின் இதே நிலை இருக்குமா?
நீங்கள் சொல்ல வந்ததை ஒரு ஆயிரம் ஆண்டு காலம் கழித்து ஒருவன் புரிந்து கொள்ள வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

ஒரே வழிதான். Proper documentation. நம் மொழியின் இலக்கணத்தை சரியாகப் பயன்படுத்தினாலே அது சரியாக நிகழும். பண்பாடு நாகரிகம் மருத்துவம் கட்டிடக் கலை என அனைத்தையும் எல்லாக் காலங்களுக்கும் கொண்டு செல்லலாம்.
மொழியின் இலக்கணத்தை சரியாகப் பயன்படுத்தினால் அது நிகழுமா?
நிச்சயம் நிகழும். நம் மொழியில் ஒரு சொல்லுக்கு ஒரு உச்சரிப்பு தான். எழுதுவதைத் தான் படிக்க முடியும். Read- past or present ?? போன்ற ஐயங்கள் எல்லாம் நம் மொழியில் எழாது,
இப்படி இயற்கையாக இருக்கும் ஒரு அமைப்பை புதியன புகுத்த வேண்டும் என்ற நோக்கில் ஏன் வேறொன்றைத் திணிக்க வேண்டும்? ஏன் பிழைகளை ஏற்க வேண்டும்? 

No comments:

Post a Comment