Tuesday 5 February 2013

வகுப்பறையில் நான்.

ஒரு கண் நெகிழ
ஒரு கண் நீர்க்க
நான்கு ஆண்டு தனிமை,
முடியப் போகும் நேரம்..
நான்கு ஆண்டை தனிமையில்
முடித்து விட்ட சோகம்...
என்னிரு விழிக்கும் போராட்டம்..
மூளைக்கு எட்டாத வாஸ்து
மூலையில், வகுப்பறையில் நான்.
எழுத வைத்த நாட்கள்
எழுதித் தீர்த்த தூவல்..
எல்லாம் கானல் நீராய்
எந்திர உலகத்தின் எச்சமாக
என் கிறுக்கல்கள் மட்டும்
எஞ்சி நிற்க... எழுதுகிறேன்.
...
சுபாசினி.

No comments:

Post a Comment