Wednesday 20 February 2013

திருக்குறளும் அரும்பதங்களும்-1 (எழிலி)


 திருக்குறள் நூலை புரட்டும் போது நமக்கு நன்கு தெரிந்த குறள்களில் கூட நமக்கு தெரியாத ஒரு சொல் ஒழிந்திருக்கும்.

      அப்படி ஒரு சொல் "எழிலி". மங்குல் போல் இதற்கும் மேகம் என்று பொருள். இந்த சொல்லை வான் சிறப்பு அதிகாரத்தில் காணலாம்.

குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

பொருள்: பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.

எழிலி-மேகம்.

No comments:

Post a Comment