Thursday 21 February 2013

இணையமும் படாத பாடுபடும் தமிழ் மொழியும்

தமிழ் ஆர்வளர்கள் இடையே புலக்கத்தில் இருக்கும் மற்றொரு பிற மொழிச்சொல் "நாவல்". நாவல் பழம், மரம் எல்லாம் தமிழ் தான், ஆனால் குறுங்காவியத்திற்கு "புதினம்" என்பதே தமிழ்ச் சொல். ஆங்கிலம் நங்கு தெரிந்தவர்கள் அதனை ஆங்கிலச் சொல் என்று தெரிந்தும் அதற்கு இணையான தமிழ்சொல் தெரியாத காரண்த்தினாலோ என்னவோ அதனைப் பயன்படுத்துகின்றனர். இதைக்கூட ஒருவாறு ஏற்றுக்கொள்ளலாம். ஆனல் தமிழ் புதினங்களைப் பற்றி தூய தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிய பலரும் "நாவலை" ஏதோ தூய தமிழ்ச்சொல் போன்று பயன்படுத்தியது தான் எரிச்சல் ஊட்டுகிறது. குறைந்தபட்சம் தூய தமிழ்க் கட்டுரைகளிலாவது அந்த சொல்லைப் பயன்படுத்தாதீர்கள். 

இணையத்தில் தமிழைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்ளலாமோ அதைவிட அதிகமாக தமிழ் மொழி சார்ந்த தவறான தகவல்களையும் பரப்பலாம். அப்படி இன்று நான் கடந்து வந்த ஒரு தகவல் தமிழின் வரலாற்றுப் புதினங்கள் பற்றியது. வர்ணனைக்காக அப்பட்டமாக தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் 'பொன்னியின் செல்வன்' என்று சோடித்திருந்தனர். பெரும்பாலனோர் படித்த ஒரே வரலாற்றுப் புதினம் அது மட்டும் தான். அதற்காக அதற்கு முன் வரலாற்றுப் புதினங்கள்இயற்றப்படவேயில்லை என்று கூறக் கூடாது. கல்கியின் முதல் வரலாற்றுப் புதினம் "பார்த்திபன் கனவு". தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் 1895 ஆம் ஆண்டில் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை என்பவரால் எழுத்தப்பட்ட "மோகனாங்கி" என்னும் நூலே ஆகும். இணையத்தில் தமிழை வளர்க்கும் நண்பர்களே, குறைந்தபட்சம் விக்கிப்பீடியாவிலாவது தேடுங்கள்....

No comments:

Post a Comment