Tuesday 12 February 2013

சகோதரி வினோதினிக்காக


தில்லியில் பிறந்ததிருந்தால் உனக்கு
கண்ணீர் அஞ்சலியும், தலைவர்கள்
இரங்கல் அறிக்கையுமாவது கிடைத்திருக்கும்
மாதாவம் செய்த தமிழ்மங்கயே!
அமிலம் வீசியவன் பிழைத்திருக்க
அழகு தமிழச்சி நீ மறைந்தாயே..
பெண்ணுரிமை பேசிய என் மக்களுக்கு
உன்னைப் பிழைக்க வைக்க வழியில்லை..
எங்கோ நடந்திருந்தால் கொடி பிடித்திருப்போம்..
கண்முன் நடந்ததனால் உன்னைக்
கண்டு கொள்ள மறந்துவிட்டோம்...
காலன் வந்து கொண்டுவிட்டான்
கண்ணிரண்டும் கலங்குதம்மா...
கண்ணே உன்னை நினைக்கயிலே...
மௌனம் சாதித்திருப்போம், உன் வரிசையில்
நாங்களும் நாளை நிற்கும்வரை...
மீளாது அங்கு நீ தூங்க
ஒரு தங்கை இங்கு எழுதுகின்றேன்...













(இயலாமையில் இதை மட்டும் தான் செய்ய முடிந்தது
:( சகோதரி வினோதினிக்காக சுபாசினியின் அஞ்சலி)

No comments:

Post a Comment