Saturday 20 October 2012

தாலாட்டு...


தாலாட்டு...


மெழுகு பொம்மை ஒத்தவனே!


பொன் நிறத்துப் பூமகனே!!!


கருவிழி தனில் நீருமேனோ???


கண்ணிட்ட மை கலங்கி


கன்னம் அதில் வழிந்தோடி


கருமை நிறம் அடையுமே...


கல்நெஞ்சு அத்தையவள் அதைக்


கண்டு கொஞ்சிடும் போது


கருப்பு வைரம் என்பாளே.....


கருத்தில் கொண்டு, நீ


கண்ணீர் நிறுத்தி தூங்கிடு


கண்ணே லாலி! லாலி!


                -சுபாஷினி

No comments:

Post a Comment