Tuesday 23 October 2012

உடுக்கள், மங்குல் என்றால் என்ன???

உடுக்கள், மங்குல் என்றால் என்ன???
பாரதிதாசன் எழுதிய இந்த வரிகளை படித்ததுண்டா? 
"திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்".
அனைத்து வார்த்தைகளுக்கும் பொருள் தெரியுமா???
"கல் தோன்றி மண்தோன்றா" என்னும் செய்யுள் போல் இந்த வரிகளும் நம் தமிழ் மொழியின் தோற்றத்தைச் சொல்வாதகவே அமைகிறது.இந்த வரிகளில் உள்ள அழகைச் சொல்லியே தீர வேண்டும்
. திங்கள்= நிலா, செழும்பரிதி= கதிரவன். ஆக இங்கு உடுக்கள் என்பது எதனைக் குறிக்கிறது? விண்மீண்கள். அவற்றின் இன்னொரு பெயர் தான் உடுக்கள். அடுத்தாக மங்குல் என்றால் மேகம் என்று பொருள். ஆக சூரியன், சந்திரன், வானம், விண்மீன், மேகம், கடல், என இயற்கையோடு இயற்கையாக பிறந்த தமிழைத் தாய்மொழியாய்க் கொண்டு பிறந்தவர் நாம். இனி உடுக்கள், மங்குல் எல்லாம் நம் வழக்கில் வாழும் தானே???
சுபாஷினி.
செய்யுள் விமர்சனங்கள் தொடரும்.
பி.கு: நாம் இலக்கியச் சான்றாக தமிழ் மொழியின் தோற்றத்திற்கு பாரதிதாசனின் இவ்வரிகளை எடுத்துக்கொள்ளவில்லை.

No comments:

Post a Comment