Saturday 22 March 2014

தமிழிலக்கணம்-3 (மெய்ப்பாடு, வெகுளி)

இன்று இலக்கணப் பதிவிற்கு செல்லும் முன்பு பொதுவான சொல் பயன்பாடு பற்றிப் பார்க்கலாம்.

சின்ன சின்ன தமிழ் வார்த்தைக்குக் கூட பக்கத்துல அதற்குப் புலக்கத்துல உள்ள தமிழ் வார்த்தைய நான் குறிப்பிடக் காரணம் ஒன்றே ஒன்று தான். பல சமயம் நாம் இது தான் பொருள் என்று நினைத்துப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு அது பொருளே கிடையாது. புரியலயா???
அடிக்கடி நாம பஸ்ல போகும் போது "ஒரே ரஷ்ஷா இருக்குப்பா" என்போம். உண்மையில் அங்கு பயன்படுத்தப்பட வேண்டிய வார்த்தை crowded-கூட்டமாக இருக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாம நம்ம தமிழ்நாட்டுல மட்டும் வேற எதோ சொல்லப் பயன்படுத்துறோம்.

இத ஏன் சொல்றேனா தமிழ் மொழியிலும் இப்படி நிறையப் பயன்பாடுகள் இருக்கு. சென்ற பதிவு இட்ட போது வெகுளி- கோபம் என்று சொல்லியிருந்த்தைப் பார்த்து அலுவலக நண்பர் ஒருவர் கேட்டார் "வெகுளினா எதார்த்தம் தானே!! நீ ஏன் தப்பா கோபம்னு போட்டுருக்க??".
வெகுளினா கோவம் தாங்க என்று சூடம் அனச்சு சத்தியம் பண்ணுனாலும் அவர் நம்பல. google translator க்கு போய் வெகுளினு அடிச்சாரு. அங்கயும் கோபம்னு காட்டல. அவர் முகத்தில் இப்போது பெருமிதச் சிரிப்பு.

தயவு செஞ்சு தமிழ் இலக்கியத் தேடலுக்கு கூகிள நம்பாதீங்க. அதிக மக்களால் பார்க்கப்பட்ட ஒரு பக்கத்த தான் அது முன்னால காட்டும். அது சரியா தப்பானு யாருக்கும் தெரியாது. translator கூட அப்படித் தான். முன்னாடி யாராச்சும் ஒரு வார்த்தைய தேடிப் பார்த்து அதுக்கு இது பொருள்னு தப்பா எதையாச்சும் add குடுத்துட்டு போயிருந்த அதுவும் தப்பா தான் காட்டும். paper presentation என்பதற்கு காகித வழங்கள் என்று மொழிபெயர்க்கும் அளவுக்கு தான் அது இருக்கிறது.

வெகுளி:

அத விட்டுட்டு வெகுளிக்கு வருவோம். எப்படி அவர நம்ப வைக்கிறது. இருக்கவே இருக்கிறது தொல்காப்பியம். அதுல மொழி பயன்பாடு மட்டுமா, வாழ்க்கை முறை எப்படினு கூட சொல்லியிருக்காங்க. இத சொல்லியிருக்க மாட்டாங்களா??? சொல்லியிருக்காரே தொல்காப்பியர்.
இதோ அந்தப் பாட்டு.

"நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப" (பொருளதிகாரம் 247)

ஆமா இதெல்லாம் என்னனு கேட்கறீங்களா...ஒரு செய்யுளுக்கு உறுப்பா வரக் கூடிய மெய்ப்பாடுகள். நவரசம்னு சொல்றாங்களே அது தான். ஆனா என்ன தமிழ்ல எட்டு ரசம் தான். சாந்தம்னு ஒன்னு தனியா இல்ல. மனசுல என்ன தோணுதோ அது முகத்துல வெளிப்படும் போது அது மெய்ப்பாடு. மெய்- உடல். இப்ப சொல்லுங்க, உலக மொழியில எந்த மொழியில இந்த வரையறை எல்லாம் இருக்கு??? எந்த அளவு documentation செஞ்சுருக்காங்க. நம்ம tracksheet எல்லாம் சும்மா, தூக்கிப் போட்டறலாம்.















சரி வாங்க நாம பாட்டுக்கு போவோம். இதுல வர வெகுளிக்கு கோபம்னு அர்த்தம். இன்னும் நான் நம்ப மாட்டேன்னு சொன்ன இதையும் படிங்க.

வெகுளி- சினம். சீற்றம்னு கூட வச்சுக்கலாம். இது எப்படி வந்துச்சு???
வேகும்-உள்-இ. = வெகுளி. இப்படி உரியடிகளால பிறந்துச்சு.
சிலர் கோபப்பட்டா என்ன வயித்தெரிச்சலானு கேட்கறோமே, "வயிறு உள்ள வேகுது. (வேகும்- உள்-இ)" அப்ப அது வெகுளி தானா? (என்ன ஒரு புத்திசாலித்தனம், இஞ்சினியரிங்க் படிச்ச புள்ளைக்கு இவ்வளவு அறிவானு நீங்க மனசுக்குள்ள சொல்றது தெரியுது. :P )

ஆனா இப்படி சகட்டுமேனிக்கு வரது எல்லாம் சினமா???  எதுக்கு எடுத்தாலும் கோவப்பட்டா அதுக்கு மாறியாதையில்ல. ஆனா தொல்காப்பியர் இதுக்கு எல்லாம் கோவப்பட்ட தான் அது கோவம், இல்லனா out of syllabus பா அப்படினு ஒரு பட்டியல் சொல்றாரு.

"உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றன
வெறுப்ப வந்த வெகுளி நான்கே."

வெகுளி ஏன் வருது? வெறுப்பால தான் வருது. (வெறுப்ப வந்த வெகுளி).
அந்த வெறுப்புக்கு எத்தன காரணம்?? நான்கு.
அந்த நாலு எது??

1. உறுப்பறை- அதாவது உடல் உறுப்புகளை சேதம் செய்றது (சூர்பனகை கோபப்பட்டு அண்ணன் கிட்ட போனதுல என்ன தப்பு?)
2. குடிகோள்- தன்னை சார்ந்து வாழ்பவருக்குத் துன்பம் தருதல் (அண்ணன் தங்கச்சி அழுதத பார்த்து சீதைய கடத்துனது கோபத்துல தான?)
3. அலை- திட்டுதல்
4. கொலை- கொலை செய்றது அல்லது அதற்கு உடந்தையா இருக்கறது.  (கண்ணகி வெகுண்டு மதுரையை அழித்தது)

இந்த காரணத்துக்கு எல்லாம் ஒருவனுக்கு சினம் வரலாம்.

















இதெல்லாம் ஏன் இலக்கணப் பகுதில எழுதறனு கேட்காதீங்க. இதெல்லாம் செய்யுளுக்குரிய மெய்ப்பாடுகளும் அவைத் தோன்றக் காரணங்களும்.

பிற மெய்ப்பாடு பத்தி கொஞ்சம் தெளிவா பொருளியல் வரும் போது பார்க்கலாம்.
இன்னைக்கு இதோட முடிச்சுக்கலாம்.

நன்றி
சுபாசினி.

3 comments:

  1. Google மொழி மாற்றம் சிரிக்க மட்டுமே...

    வெகுளி விளக்கம் அற்புதம்...

    சுபாஷினி அவர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்லா இருக்கு,.வாழ்த்துக்கள்

    ReplyDelete