Saturday 18 January 2014

திருக்குறளும் அரும்பதங்களும்-2 (விசும்பு)

வானம் என்னும் சொல்லுக்கு நமக்கு தெரிந்த தமிழ் சொற்கள் பல உண்டு. அதில் வழக்கில் இல்லாத ஒரு சொல் விசும்பு.

விசும்பு - வானம்.

குறள்:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

(வான்சிறப்பு, குறள்: 16)

விளக்கம்:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

கூடுதல் தகவல்: 
"விசும்பு" ஜெயமோகன் எழுதிய 12 அறிவியல் புனைகதைகளின் தொகுதி. இக்கதைகள் திண்ணை இணைய இதழில் வெளியானவை.

No comments:

Post a Comment