Thursday 22 October 2015

சிலப்பதிகாரமும் கண்ணனும்

கண்ணனை புகழ்ந்து மகிழ்ந்து போற்றி பல பாடல்களைக் கேட்டிருக்கிறோம். அதில்  ஓர் பா என்  மனதில்  நீங்காமல் நிற்கின்றது.

கண்ணனைக்  காணத கண்ணெல்லாம்  கண்ணென்றாகுமா? அது இருந்து பிறவற்றை கண்டுதான் என்ன பயன்? கண்ணனைக் கண்டால் மட்டும்  அவ்விரண்டும் கண்ணென்றாகிவிடுமா? கண்ணிமைத்துக்  கண்ணனை காணும்  கண்ணெல்லாம் கண்ணாகா.. இமைக்காமல்  கரியவனை கண்டு களிக்கும் கண்களே கண்கள், மற்றெல்லாம் இருபுண்கள். (உன்னைக்  காணாத கண்ணும் கண்ணல்ல என்ற பாடல்  நினைவிற்கு வருகிறதா.? )

இப்படி நான் இரண்டு வரிசேர்த்து எழுதிய பா இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம் .
ஆய்ச்சியர் குரவையில் வரும்  அச்செய்யுள் இதோ.

"கரியவனை காணாத கண் என்ன கண்ணே?
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே? "

அடடா! கவிதை! கவிதை!

No comments:

Post a Comment