Thursday 11 July 2013

நான் << மலர் .

















கூட்டத்தில் பெண்ணொருத்தி கூடையோடு நின்றிருக்க
தோட்டத்துப் பூவதில் மாலையாக வந்திருக்க
ஓடாத எண்ணங்களை அதுபார்த்து ஓட்டிவிட்டேன்
தேடாத பொருள் தேடியெங்கோ தாட்டிவிட்டேன்...

பேரம் பேசிவிட்டு போவார் பலரே
ஓரமாய் வேடிக்கை பார்ப்பரும் உளரே
வாங்கி வைக்கும் மக்கள் சிலரே
ஏங்கி நிக்கும் மற்ற மலரே....

விலையேது இன்று விக்காத மலருக்கு ???
கலையிழந்த கண்ணாய் ஒதுங்கியே வீற்றிருக்கு....
பூவாகப் பூத்திருந்தால் அந்தியும் வந்திருக்கும்
நோவாகிப் போகும்முன்னே வாழ்க்கை முடிந்திருக்கும்....

மந்தையில் மனிதனாகப் பிறந்துவிட்டேன்- உலகச்
சந்தையில் விலைபோக மறந்துவிட்டேன் - ஏனோ
காலத்தின் கட்டாயமென கட்டுண்ட காற்றாய்
ஞாலத்தில் வாழுகின்றேன் ஞானத்தைத் தேடுகின்றேன்.

No comments:

Post a Comment