Wednesday 27 March 2013

விக்கல்....

விக்கல் வரும் போதெல்லாம் 
உன் நினைவு...

என் தலையைத் தட்டி
நீ தண்ணீர் குடித்த நினைவு...

அதிர்ச்சி வைத்தியம் என்று
அசட்டுத்தனம் நீ செய்த நினைவு...

"நினைக்க நான் இருக்க
நினைத்தது யார் உன்னை??"
என்று நித்தமும் நீ சண்டையிட்ட நினைவு...

இன்று...
நினைத்தது நீ இல்லை... தெரிந்தும்
நினைத்திருக்க மாட்டோயோ... என
ஏங்குகிறேன்.. 
விக்கல் வரும் போதெல்லாம்...

(நினைத்து நினைத்து எழுதியது
சுபாசினி. :P)

1 comment: