Showing posts with label அழகிய தமிழ் சொற்றொடர்களைப் பயன்படுத்தலாம் வாங்க!!!. Show all posts
Showing posts with label அழகிய தமிழ் சொற்றொடர்களைப் பயன்படுத்தலாம் வாங்க!!!. Show all posts

Tuesday, 4 February 2014

சுடச்சுடரும் பொன்!!!

ஒருவருக்கு துன்பம் மேல் துன்பம் வர வர அவர்கள் தங்கள் நற்தன்மையை மேன்மேலும் காட்டுவர் என்னும் பொருளிலும், எப்பொழுதும் நல்ல ஒழுக்கத்துடன் இருப்பவருக்கு சூடு மேல் சூடாய் துன்பம் வரும் என்னும் பொருளிலும் இந்த சொற்றொடரைக் கொள்ளலாம். எவ்வாறாயினும் சூடு தான் பொன்னை மிளிரச் செய்கிறது. அது போல் துன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த உவமை பின்வரும் திருக்குறளில் காணப்படுகிறது.

"சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (குறள்-267)."




Thursday, 23 January 2014

ஏறுபோல் பீடு நடை!!!


ஏறுபோல் பீடு நடை!!!
என்ன ஒரு அழகான சொற்றொடர். நிமிர்ந்து நடக்கும் காளை போல் பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து வாழும் ஒரு நிலையைக் குறிக்கும் வரி. இது இடம்பெற்ற நூல் வேறு எதுவும் இல்லை. நம்  திருக்குறள் தாம்.
காங்கேயம் காளை படையப்பா படத்தில் நடந்து வருவது போன்ற ஒரு காட்சி கண் முன் தோன்றுகிறது அல்லவா??



(புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. குறள் - 59)